சரித்திரம் பல கண்ட கஃபாவே,சாட்சி சொல்வாயா?
சரித்திரம் பல கண்ட கஃபாவே,சாட்சி சொல்வாயா?
(கீழை ஜஹாங்கீர் அரூஸி)
உன்னை இடிக்க வந்த அப்ரஹாவின் யானைப்படையை அபாபீல் என்னும் பட்சிகளை கொண்டு இறைவன் அழித்தொழிப்பதற்கு காரணமே நீதான்.
முதன் முதலில் உன்னை காண வந்த பெருமானாரின் ஆர்வத்தை சமாதானம் என்ற மக்கள் நலன் கருதப்பட்ட ஹுதைபியா உடன்படிக்கை மூலம் தடுத்து நிறுத்தியதும் நீதான்.
அந்த ஒப்பந்தத்தின் மூலம் மகத்தான வெற்றியை முஸ்லிம்கள் காண்பதற்கு காரணமும் நீதான்.
ஒவ்வொரு நாளும் லட்சோப,லட்சம் மக்களின் நினைவிலும்,பார்வையிலும் அச்சத்தை கொடுப்பதும் நீதான்.
உன்னை தேடி வந்த மக்களில் நானும் ஒருவன் என்பதை நினைக்கும் போது பேரானந்தம் அடைகிறேன்.
நான் உன்னை காண வரும் செய்தியறிந்த எனது உறவுகளும்,நட்புகளும் பல்வேறு கோரிக்கைகளை உனக்கு முன்பாக எடுத்துரைக்க சொன்னார்கள்.
ஒவ்வொருவரின் கோரிக்கையையும் உனக்கு முன்பாக சமர்பித்ததேன் என்பதற்கு நீ சாட்சி கூறுவாயா?
பாலஸ்தீன்,சிரியா,எகிப்து,ஏமன் உள்ளிட்ட நாடுகளில் வாழும் முஸ்லிம் மக்களின் துயர் போக்கிட உன்னிடம் கண்ணீர் சிந்தி கையேந்தினேன்.
எனது துஆவுக்கு அல்லாஹ்விடத்தில் சாட்சி சொல்வாயா?