மின்னல் தாக்கி பெண் சாவு
முதுகுளத்தூர் அருகே திங்கள்கிழமை வயலில் மிளகாய் பழம் பறிக்க சென்ற பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலைச் சேர்ந்த முத்து விஜயன் மனைவி திருமங்களேஸ்வரி (26). மைக்கேல் பட்டணத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் மனைவி பிரகாசி (50), அதே ஊரைச் சேர்ந்த சர்குணபதம் மனைவி மேரி (50). இவர்களுடன் மேலும் 4 பெண்கள் சேர்ந்து கிராமத்தின் அருகில் உள்ள வயலில் மிளகாய் பழம் பறித்துக் கொண்டிருந்த போது திடீரென இடியுடன் மழை பெய்தது.
அப்போது வயலில் நின்றிருந்த திருமங்களேஸ்வரி, பிரகாசி, மேரி ஆகியோர் மீது மின்னல் தாக்கியது. இதில் திருமங்களேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த பிரகாசி, மேரி ஆகியோரை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து கீழத்தூவல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.