பெங்களூரில் ஜெயகாந்தன் நினைவுக் கூட்டம்

Vinkmag ad
பெங்களூர் வாசக வட்டத்தின் இந்த மாதக் கூடுகை ஜெயகாந்தன் நினைவஞ்சலிக் கூட்டமாக நடைபெறும்.

ஜெயகாந்தனின் படைப்புகள் மற்றும் ஆளுமை குறித்த உரைகள், நினைவுப் பகிர்தல்கள். அதைத் தொடர்ந்து வழக்கமான இலக்கிய உரையாடல்கள்.

நாள்: 19 ஏப்ரல், ஞாயிறு மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை.

இடம்: Conference room at CRMIT Solutions, Fortune Summit Business Park (6th floor), Near Central Silk Board Junction, 244, Hosur Main Road, Bangalore 560 068.

அனைவரும் வருக.

இந்த அடுக்கு மாடிக் கட்டிடம் சில்க் போர்ட் மேம்பாலம் கீழிறங்கும் இடத்தில் (ஓசூர் செல்லும் திசையில் இடது பக்கமாக) உள்ளது. கண்டுபிடிப்பது மிகவும் எளிது. கூட்டத்திற்கு இந்த இடத்தை உவகையுடன் அளிக்கும் என். சொக்கன் அவர்களுக்கு மிக்க நன்றி.

மேலும் விவரங்களுக்கு ஃபேஸ்புக் செய்திப் பெட்டியில் அல்லது மின்  அஞ்சலில் என்னைத் தொடர்பு கொள்ளவும். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்வது குறித்த கேள்விகளுக்கு என்.சொக்கனைத் தொடர்பு கொள்ளவும்.

பி.கு: 2011 நவம்பரில் தொடங்கிய பெங்களூர் வாசகர் வட்டம் தொடர்ந்து மாதாந்திரக் கூட்டங்களை நடத்தி வந்தது. கடந்த ஒரு வருடமாகத் தொய்வு நிலையில் உள்ளது. இந்தத் தமிழ்ப் புத்தாண்டிலிருந்து அதற்குப் புத்துயிரூட்டும் முகமாக, முதல் நிகழ்ச்சியாக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. தங்களுக்குத் தெரிந்த பெங்களூர் தமிழ் வாசக நண்பர்களிடம் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ளவும்.

அன்புடன்,
ஜடாயு

https://www.facebook.com/jataayu.blore

jataayu.b@gmail.com

— 

News

Read Previous

மஸ்ஜிதுன்னபவி தொழக்கூடிய பள்ளி மட்டுமல்ல,பெருமானார்(ஸல்)வாழும் இடமுமாகும்!

Read Next

மறத்தமிழே மறுக்காதே ………………

Leave a Reply

Your email address will not be published.