காசநோய் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
முதுகுளத்தூர், மார்ச் 31: முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை மாவட்ட காசநோய் மையம் சார்பில் காசநோய் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநர் கே.பழனிநாதன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை மேற்பார்வையாளர் எஸ்.பக்கீர் முகமது, மாவட்ட காச நோய் மைய அலுவலர்கள் கணபதி, ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அலுவலர்கள் கருப்பணன், கீதா பிரியா ஆகியோர் செய்திருந்தனர். மருத்துவர் ஆர்.ஜெயசங்கர் நன்றி கூறினார்.