விஷம் குடித்து பெண் சாவு

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே விஷம் குடித்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளாத்தி கூட்டத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி தனலெட்சுமி (32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முனியாண்டி அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து தகராறு செய்வாராம்.

சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே தனலெட்சுமி மனமுடைந்து விஷம் அருந்தினார். உடனே அவரை பரமக்குடி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கணவர் முனியாண்டி மீது இளஞ்செம்பூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்

News

Read Previous

ரோடு சேதத்தால் விபத்துகள் அதிகரிப்பு: இரவு நேர போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்

Read Next

குட்டைக் கால்களின் பனைமரக் கதை..

Leave a Reply

Your email address will not be published.