கவிதைக்கு ஒரு நாளா?
கவிதைக்கு ஒரு நாளா?
மனிதா
உன் இருப்பே
ஒரு (க) விதைதானே!
பிறெகென்ன
ஒரு தனிநாள்
கவிதைக்கு?
எண்ணங்களால் தானே
வண்ணங்கள்
வாழ்க்கையாகிறது!
வரும் நாள்
ஒவ்வொன்றும்
வரமாக இருக்கும்போது
உனக்கு ஒருநாள்
போதுமா?
விழிக்கின்ற நேரம்
ஒவ்வொன்றும்
தருணம்;
விரித்திடு உன்
சிறகை!
சுபவேளை பார்த்து
சுக வாழ்க்கை
தேடல் முடியாது!
விதைக்கின்ற
வினையாவும்
செயற்கரியதாக
விதைத்துவிடு!
விண்ணெட்டும் தூரம்
உன் புகழெட்டும்
சொல்வேன்!
இது கதையல்ல
(க)விதை
நீ நம்பு!!
ஆக்கம்: சுரேஜமீ
KKSR <aurosun@gmail.com>
Tags: கவிதை