காரைக்குடி உணவகம்

Vinkmag ad

காரைக்குடி உணவகம்

karaikudi_html_2a1129c8

ஜோதிஜி திருப்பூர்

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

சென்னை

 

 

 

காரைக்குடி உணவகம்

(ருசியா சாப்பிட்டு பழகுங்க)

ஜோதிஜி திருப்பூர்

மின்னஞ்சல் – powerjothig@yahoo.com

வகை – அனுபவம்

வெளியீடு : http://FreeTamilEbooks.com

அட்டைப்படம் – மனோஜ் குமார் socrates1857@gmail.com

எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.

 

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

என்னுரை

வணக்கம்.

இது என் ஏழாவது மின் நூல். முந்தைய ஆறு மின் நூல்களின் பட்டியலை இந்த மின் நூலின் கடைசி பக்கத்தில் கொடுத்துள்ளேன். முதல் மின் நூல் 2013 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட்டேன். கடந்த 14 மாதங்களில் ஆறு மின் நூல்கள் வழியாக 66000+ பேர்களை சென்றடைந்துள்ளேன். இது வரையிலும் அச்சுப் புத்தகமாக டாலர் நகரம் என்ற முதல் புத்தகம் வெளி வந்தது. மேலும் இரண்டு புத்தகங்கள் அச்சுக்காக காத்திருப்பில் உள்ளது. இணையம் என்றொரு வசதி மட்டும் வந்து இருக்காத பட்சத்தில் நானும் சராசரி திருப்பூர் வாசியாகத் தான் என் வாழ்க்கையை கழித்துருப்பேன். கடைசி வரைக்கும் எனக்குள் இருக்கும் எழுத்துத் திறமையை கண்டிருக்க முடியாது. இணையத்தில் தமிழ் எழுத்து வரவழைக்க, பரவலாக்க உழைத்த அனைவருக்கும் என் வணக்கம்.

என் தேவியர் இல்லம் வலைபதிவில் எழுதப்பட்ட கட்டுரைகளை இதில் உங்களுக்கு தொகுத்துக் கொடுத்துள்ளேன். உணவு, ஆன்மீகம், அரசியல் இந்த மூன்றுமே மக்களின் அவசிய தேவையாக உள்ளது. அரசியல் என்பதனை காலம் காலமாக மக்கள் நமக்கு தேவையில்லாதது எனக் கருதி ஒதுங்கிச் சென்று கொண்டே இருந்தாலும் ஏதோவொரு ரூபத்தின் வாயிலாக ஒவ்வொருவரையும் தாக்கிக் கொண்டே தான் இருக்கின்றது. இந்திய ஜனநாயகத்தில் தேர்தல் அரசியல் இருந்தது. ஆனால் இன்று பரிணாம வளர்ச்சியில் சாதி அரசியல், மத அரசியல், மொழி அரசியல், பிராந்திய வெறி அரசியல் என பல கூறுகளாக பிரிந்துள்ளது.

ஆனால் தற்பொழுது தமிழ்நாட்டில் இடைத் தேர்தல்களையும், ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வருகின்ற பொதுத் தேர்தல்களையும் பொது மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காரணம் ஓட்டுக்காக கிடைக்கும் சொற்பத் தொகை என்பது அவர்கள் குடும்பம் ஒரு மாதம் முழுக்க சேமிக்க முடியாத தொகையாக உள்ளது. மக்கள் ஓட்டுக்காக கூச்சமின்றி கேட்டு வாங்கிக் கொள்கின்றனர். அரசியல்வாதிகளும் வெட்கமின்றி கொடுத்துப் பழகி விட்டனர்.

இதில் தொகுக்கப்பட்டுள்ள 31 கட்டுரைகளும் என் வலைபதிவில் வெளியிட்ட இரண்டு நாளைக்குள் ஆயிரம் பேர்களுக்கு மேல் படிக்கப்பட்ட கட்டுரையாகும். படித்த பலரும் தங்கள் தொடர்பில் உள்ளவர்களுக்கு பகிர்ந்ததாக பின்னூட்டத்தில் தெரிவித்து இருந்தனர்.

காரைக்குடி உணவகம் பகுதியில் எழுதப்பட்ட ஒவ்வொரு கட்டுரையும் வாசித்தவர்களின் குடும்ப நலனில் அக்கறை செலுத்தியது. ஆன்மீகம் குறித்த கட்டுரைகள் அவர்களின் சிந்தனைகளை உரசிப் பார்த்தது. எப்போதும் போல அரசியல் கட்டுரைகள் அதிக வாசகர்களை தளத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது. ஒவ்வொரு கட்டுரையும் தனிப்பட்ட முறையில் எனக்கும் திருப்தி அளித்தது.

கடந்த ஐந்து வருடமாக இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு நான் சார்ந்துள்ள ஆயத்த ஆடைத் தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு என்னால் ஆன விருப்பங்களை வலைபதிவில் வாயிலாக பலரின் பார்வைக்கு படைத்துள்ளேன். நான் வாழும் சமூகம் குறித்த விமர்சனங்களை இங்கே வைத்துள்ளேன். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உறுதியாக நம்புகின்றேன். நிச்சயம் இங்கே மாறுதல் வரும் என்ற எண்ணத்தில் பொழுது போக்கு விசயங்களில் அதிகம் கவனம் செலுத்தாமல் ஒவ்வொருவரின் சிந்தனைகளுக்கான விதைகளை ஒவ்வொரு சமயத்தில் விதைத்து வந்துள்ளேன். வாசிப்பவர்களுக்கு திருப்தியைத் தந்த மகிழ்ச்சி எனக்கு கிடைத்துள்ளது. நன்றி.

நட்புடன்

(ஜோதிஜி திருப்பூர்)

03.03.2015

தொடர்புக்கு – powerjothig@yahoo.com

வலைபதிவு http://deviyar-illam.blogspot.com

 

 

 

பதிவிறக்க*

http://freetamilebooks.com/ebooks/karaikudi-unavagam/

 

News

Read Previous

ஆட்கொள்ள வேண்டும் ஐயா !

Read Next

கட்டுப்பாடு

Leave a Reply

Your email address will not be published.