ஆட்கொள்ள வேண்டும் ஐயா !

Vinkmag ad

ஆட்கொள்ள வேண்டும் ஐயா !
( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் )

கருணைகூர் முகங்கள் ஆறும்
கரத்தினில் வேலும் கொண்டு
அருமையாம் தமிழைக் காக்கும்
அழகுடை கந்த வேளே
உரிமையால் உன்னைப் பாட
உவப்புடன் நிற்கும் என்னை
கரிசனை கொண்டு நாளும்
காத்திட வாரும் ஐயா !

பாயிலே படுக்கா முன்னம்
பன்னிரு கையா உன்னை
காவியம் ஆக்கி நானும்
கற்பவர்க் கீய்தல் வேண்டும்
சேயென நினத்து என்னை
தினமுமே காக்க வேண்டி
மாமயில் ஏறும் கந்தா
மலரடி போற்று கின்றேன் !

செந்தமிழ் கொண்டு நாளும்
நிந்தனைப் போற்ற வேண்டும்
வந்தஎன் வினைகள் போக
சந்ததம் உதவு கந்தா
அந்தமில் உருவம் ஆனாய்
அனைத்து மாய் நிற்கின்றாயே
கந்தனே நாளும் என்னை
காத்திட வேண்டும் ஐயா!

ஆணவம் போக்கி என்னை
ஆட்கொள்ள வேண்டும் ஐயா
அலைபாயும் மனத்தை நாளும்
அடக்கிட வேண்டும் ஐயா
நாளெலாம் உந்தன் நாமம்
நான் சொல்லி நிற்கவேணும்
நீயெனக் கருள்வாய் ஐயா
நித்தமும் கந்த வேளே !

News

Read Previous

குடியம் குகை – ஆவணப் படம்

Read Next

காரைக்குடி உணவகம்

Leave a Reply

Your email address will not be published.