பிப்ரவரி 20, துபாயில் கவிதை நிகழ்ச்சி

Vinkmag ad
வணக்கம்!

வருகிற வெள்ளிக்கிழமை 20.02.2015 காலை 11.00 மணிக்கு துபாய் கராமா சிவஸ்டார்பவனில் நம் தமிழ்த்தேரின் 86வது சிறப்பிதழ் “காதல் இனிது” நடைபெற உள்ளது.

கனடா நாட்டிலிருந்து இணையதளம் வாயிலாக அறியப்பெற்ற கவிஞர் அன்புடன புகாரி வருகிறார் நம் நிகழ்வில் சிறப்பு விருந்தினராய் கலந்து கொள்ள..

கவியரங்கத்தை திருமதி.ஸ்வேதா கோபாலுடன் இணைந்து திருமதி.ரமா மலர்வண்ணன் நடத்தித் தர இசைவு தெரிவித்திருக்கிறார்கள்.

காதலர் தினத்தையொட்டி பங்கேற்க விரும்பும் எவரும்.. தங்களுக்குப் பிடித்த பாடலைப் பாடிட அழைக்கிறோம்!  உங்கள் பெயரை முன்னதாகப்  பதிவு செய்து கொள்ளவும் ..

நேரம் குறுகிய அளவே நம் நிகழ்விற்கு அமைகின்றபடியால்.. அனைவரும் தங்கள் பங்களிப்பை 3 நிமிடங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும்..

கவிதைகள் வந்து குவிகின்ற காதல் தலைப்பில்.. அருமையான புத்தக வடிவம் தந்துவருகிறார் நம் ஜியாவுதீன்…

உங்களின் முழுமையான ஒத்துழைப்போடு மீண்டும் அரியதோர் விழாவை அமீரகத்தில் நாம் காணுவோம்!

வாருங்கள்!  இன்பத்தமிழ் சுவைக்க!!

அன்புடன்
காவிரிமைந்தன்

ஜியாவுதீன்

News

Read Previous

பசியின்மையைப் போக்க பல வழிகள்

Read Next

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

Leave a Reply

Your email address will not be published.