சாத்தனூர் கண்மாய் கரையில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

Vinkmag ad

முதுகுளத்தூர், :முதுகுளத்தூர் அருகேயுள்ள சா த்தனூர் கண்மாய் கரையில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என  ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதுகுளத்தூர் அருகேயுள்ள சாத்தனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெ ற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். தாசில் தார் ராமமூர்த்தி முன் னிலை வகித்தார்.
இதில் ஊராட்சித் தலைவர் செல்வம் பேசுகையில், சாத்தனூர் கண்மாய் கரை யில் உள்ள சாலை பழுதடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்று உள்ளது. எனவே தடுப்புச் சுவர் அமைத்து சாலையை சரி செய்ய வேண்டும். நெடுங்குளம் கிராமத்தில் குறைந்த மின் அழுத்தத்தால் மின் வினியோகம் மிக குறைவாக உள்ளது. பல்புகள் இரவு நேரங்களில் எரிவதில்லை. அங்கு புதிய டிரான்ஸ்பா ர்மர் அமைக்க வேண்டும். அப்பனேந்தல் கண்மாயில் புதிய மடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

முகாமில் சமூக நலத்திட்ட தாசில்தார் பவானி, ஆதிதிராவிட நலத்திட்ட தாசில்தார் மீனாட்சி, யூனியன் ஆணையாளர் குருநாதன், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், ஒன்றிய தலைவர் சுதந்திரா காந்தி, மண்டல துணை வட்டாட்சியர் இந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

முதுகுளத்தூர்- காத்தாகுளம் நடுரோட்டில் திடீர் பள்ளம்

Read Next

பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள்

Leave a Reply

Your email address will not be published.