எங்கு செல்கிறது நமது சமுதாயம் ?. : திருமண செலவுகள்
அன்பு நண்பர் பிரசன்னா அவர்களுக்கு
உங்கள் மின் அஞ்சல் மூலம் நல்ல பல கருத்துகள் பல நல்ல மனிதர்களை சென்று அடைகிறது. வாழ்த்துகள்.
சமீப காலமாக நமது சமுதாயத்தின் மீது என் மனதில் தோன்றிய ஒரு சிறிய வருத்தம் . அதை உங்கள் மூலமாக நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொள்ள ஆசை.
சென்னையில் ஒரு திருமணத்திற்கு சென்று இருந்தேன்.
கல்யாண சத்திரம் நல்ல விசாலமான கூடம். நாள் வாடகை 2 லட்சம் .மேலும் மின்சார ,தண்ணீர் போன்ற இத்யாதிகளுக்கு 50000 ருபாய் .
என் உறவினர் இரண்டு தினங்கள் வாடகைக்கு எடுத்து இருந்தார் . 5 லட்சம் ருபாய் ஆயிற்று .மேற் கொண்டு சாப்பாடு ,போக்குவரத்து போன்ற வகைகளுக்கு12 லட்சம் ருபாய் ஆயிற்று. மற்ற செலவுகளுக்கு 2 லட்சம் ஆயிற்று. இது தவிர மணப்பெண்,மணமகன் நகை,துணிமணிகள் செலவு தனி.அவர்கள் திருமணத்திற்கு பிறகு தனி குடித்தனம் செய்வதற்கு வாங்கி கொடுத்த பொருட்கள் செலவு தனி .ஆக ஒரு திருமணத்திற்கு இன்று நடக்கும் செலவு கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய் .
எங்கு செல்கிறது நமது சமுதாயம் ?.
கொஞ்சம் யோசிக்கலாமா நண்பர்களே .
என் மன ஆற்றாமை தாங்காமல் தான் இந்த அஞ்சலை வரைந்து உள்ளேன். ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்
அன்புடன்
கிருஷ்ணன் ஜி