2015 வரை ரேஷன் கார்டுகள் செல்லும்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரேஷன் கார்டுகள் 2015ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை செல்லும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள் 2015ம் ஆண்டிற்கு புதுப்பிக்கும் வகையில், உள்தாள்கள் அச்சிடப்பட்டு ரேஷன் அட்டையில் இணைத்து, ரேசன் கார்டுகள் செல்லும்படி வகையில், 01.01.2015 முதல் 31.12.2015 வரை நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது என கூறியுள்ளது.