டிசம்பர் 2, துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் அமீரக 43 வது தேசிய தினம்
டிசம்பர் 2, துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் அமீரக 43 வது தேசிய தினம்
துபாய் : துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 43 ஆவது தேசிய தினம் 02.12.2014 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஸாபில் பூங்காவில் ( zabeel park – jaffilia metro அருகில் ) நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.
பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.
பூங்காவில் காலை 9.30 மணிக்குள் விளையாட்டில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிகழ்வில் பங்கேற்க வருவோருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் குடும்பத்தினருடன் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன் அனுமதிச் சீட்டு பெறுவோர் மட்டுமே நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
முன் அனுமதிச் சீட்டுகளை
கும்பகோணம் சாதிக் 050 22 52 711
காயல் ஈஸா 055 4063 711
கீழக்கரை ஹமீது யாசின் 050 475 3052
மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ் 050 77 52 737
முதுவை ஹிதாயத் 050 51 96 433
படேஷா பஷீர் 050 54 54 140
ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.