விபத்தை ஏற்படுத்தும் முதுகுளத்தூர்-கமுதி தார்ச்சாலை

Vinkmag ad

முதுகுளத்தூர்-கமுதி சாலையில் காஞ்சிரங்குளம் விலக்கு ரோடு விபத்தை ஏற்படுத்தும் சாலையாக இருப்பதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதுகுளத்தூரில் இருந்து கமுதி, அருப்புக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில், காஞ்சிரங்குளம் விலக்கு சாலை  குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையில்  வரும் வாகன ஓட்டுநர்கள் பள்ளத்தை கவனிக்காமல் வருவதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்ட நிலையில், தற்போது வாகன ஓட்டுநர்களுக்கு அடையாளக் குறியாக பனை ஓலை மட்டைகளை வைத்துள்ளனர்.

எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்  உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News

Read Previous

முதுகுளத்தூரில் வீடு இடிந்து 2 குழந்தைகள் காயம்

Read Next

முதுகுளத்தூர் தாலுகாவில் 2 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை மூன்று மாதமாக நிறுத்தம் முதியோர் கடும் அவதி

Leave a Reply

Your email address will not be published.