குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
முதுகுளத்தூரில் பெற்றோர்கள் குழந்தைகளை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய ஆலோசனை கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு, மாவட்ட மனநல மருத்துவர் பெரியார் லெனின் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட திட்ட அலுவலர் சுரேஷ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் எம். தினகர்ராஜ், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பெற்றோர்கள் குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் பாரமரித்தல் பற்றியும், சமூக பழக்க வழக்கம், கல்வி கற்பது குறித்தும் மருத்துவர் பெரியார் லெனின் பெற்றோர்களிடம் எடுத்துரைத்தார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.