எலுமிச்சை சாறு

Vinkmag ad

 

எலுமிச்சை சாறு

கலீல் பாகவி – குவைத்

 

இன்றைய இளைஞர்களும், நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறுநீரகக் கல்…

இருபது வயது இளைஞர்கள் கூட, இந்தப் பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர்.

இதற்கு கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அதுதான் அற்புத பழமான எலுமிச்சம் பழம் !

ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை.

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார். சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது. பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம், உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில் தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது. எனவே எலுமிச்சைச்சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு ‘லெமனேட் தெரபி’ என்று பெயர்.

தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் தினமும் பருகுவது தான் இந்த ‘லெமனேட் தெரபி’ செலவு அதிகம் பிடிக்காத தொந்தரவில்லாத சுவையான சிகிச்சை.

இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 விலிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிட்ரிக் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான். பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. இது அவர்களுக்கே தெரிவதில்லை.

சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?

சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம்.

இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் வகைக் கற்களும், சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்தக் கழிவு அதிகமாக உடலில் சேரும்போது முழுமையாக வெளியேறாமல், சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகி விடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.

இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கொம்பு கற்கள் இருக்குமாம். கிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.

ஏற்கனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல் இருந்தால், உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த சில ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது. கற்கள் பெரிதாகி வேறு வழியில்லாத நிலை தோன்றும் போது அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி, பெர்குடானியஸ், நெப்ரோலிதோடமி மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரோடெரோஸ்கோபி என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவை சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது.

நன்றி : நர்கிஸ் – செப்டம்பர் 2014

News

Read Previous

மீண்டும் அடிமையாய் மாறலாம்!

Read Next

நல்ல_நோட்டா_கள்ளநோட்டா ???

Leave a Reply

Your email address will not be published.