நாம் தமிழர் கட்சி தெருமுனைக் கூட்டம்
முதுகுளத்தூர் பேருந்துநிலையம் அருகில் வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு முதுகுளத்தூர் ஒன்றியச் செயலர் ச.இளந்தமிழன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில், முனீஸ், புதியவன், தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில கொள்கை பரப்பு செயலர் இடும்பவனம் கார்த்திக் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட கொள்கை பரப்பு செயலர் மதிவாணன், மாவட்டச் செயலர் இளங்கோ, மாவட்டத் தலைவர் டோமினிக் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.