தனிமனித ஒழுக்கம் இனிய சுதந்திரத் தொடக்கம்..!

Vinkmag ad

 

தனிமனித ஒழுக்கம் இனிய சுதந்திரத் தொடக்கம்..!

 

சாலை ஓரச்

சோலை பார்த்துச்

சரிந்து பூவைப் பறிக்கச்

சாரைப் பாம்பு

வாயும் பட்டுச்

சாய்ந்த பேரும் உண்டு!

 

வேலி தாண்டிப்

போன ஆடும்

வேட்டை யாதல் உண்டு!

கேலிப் பேச்சுப்

பந்த யங்கள்

கேடென் றால்,நீ நம்பு!

 

வாலெ டுத்துப்

பிளவில் வைத்து

ஆப்ப சைத்தால் நன்றோ?

காலி ரண்டும்

இழந்த பின்னர்

களிக்கும் ஆட்டம் உண்டோ?

 

சுருதி காத்து

வாழ வேண்டின்

சூழல் காத்து நில்லு!

சுதந்தி ரத்தின்

சுகமும் வேண்டின்

சுயத்தைக் காத்து வெல்லு!

 

நயங்கள் பேசிச்

சுரண்டு கின்ற

நாக ரீகம் விட்டுப்

பயங்க ளின்றி

வாழ லாகும்

பகிர்ந்து வாழ எண்ணு!

 

மாநிலம் இணைத்து

பாரதம் எடுத்து

மதிப்புக் கொடுத்தார் பாட்டீல்!

நானிலம் செழிக்க

நலங்கள் கொழிக்க

நதிகள் இணைத்து,ஏன் காட்டீர்?

 

பெருமை காட்டிப்

பிணக்கு கூட்டிப்

பிரித்து வைத்துப் போனோர்,

சிறுமை காணச்

சேர்ந்து வாழ்ந்து

சிறப்பு நாட்டி நில்லு!

**    ***   ****  ***  **

எசேக்கியல் காளியப்பன் -சென்னை 126

 

eezekkial@gmail.com

 

News

Read Previous

இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள்

Read Next

புறக்கணிக்கப்பட வேண்டிய இஸ்ரேலிய பொருட்கள்

Leave a Reply

Your email address will not be published.