முதுகுளத்தூரில் பாலஸ்தீன மக்களுக்காக சிறப்பு துஆ
முதுகுளத்தூரில் பாலஸ்தீன மக்களுக்காக சிறப்பு துஆ
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசலில் இன்று 25.07.2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் யாசின் ஓதி சிறப்பு துஆ செய்யப்பட்டது.
மேலும் முதுகுளத்தூர் மக்களின் வழமான வாழ்வுக்காகவும், வருங்கால தலைமுறையினரின் நன்மைக்காகவும் துஆ செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஜமாஅத் தலைவர் ஹுமாயூன், தலைமை இமாம் மௌலவி எஸ்.அஹமத் பஷீர் சேட் ஆலிம், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் ஏ. ஃபக்ருதீன் அலி அஹமது ( கத்தார் ), ஐக்கிய அரபு அமீரக பிரதிநிதிகள் ஏ அஹமத் இம்தாதுல்லா, அசன் தீன், உமர், அப்துல்லா, ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.