எங்கே அரபுலகம்…?

Vinkmag ad
gazza pic 1கஸ்ஸாவில் மழலைகள் பல மரித்தும் மவ்ன விரதம் இருக்கும் முஸ்லீம் உலகம்.யூதனை எதிர்த்து களமிறங்கும் மனோ பலத்தை அரபுலகுக்கு கொடு யாஅல்லாஹ்…!

யா அல்லாஹ் ஃபலஸ்தீன குழந்தைகளை நீயே பாதுகாப்பாயாக…!கஸ்ஸா மக்களுக்காக நம் அதிகமதிகம் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்…!

எங்கே அரபுலகம்…?
ஃபலஸ்தீன்…
முஸ்லீம்களின் முக்கிய பூமி…
யூதர்களால் திட்டமிட்டு பறிக்கப்பட்டு…
முஸ்லீம்கள் நடுத்தெருவிற்கு துரத்தப்பட்டு…
கலவரக்காடாக காட்சியாக்கப்பட்டு…
இன்று தொடர் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது…
கஸ்ஸா நகர வீதியெங்கும் பிணச்சிதறல்…
பிஞ்சுகள் பஞ்சாக்கப்பட்டு பரத்தப்பட்டுள்ளன…
தாய்மையின் தழுவலோடு ஆன்மா அகன்றுள்ளது…
முதுமையின் முனகல் மூச்சற்று மடிந்துள்ளன…
யூத வெறியனின் இலக்கு தாய்களும், சேய்களும்…
வாரிசில்லாமல் ஆக்க வரிந்துகட்டி வன்மம் புரிகிறான்…
கேட்க நாதியில்லை என்ற திமிரில் தாண்டவமாடுகிறான்…
அவன் அழிப்பில் மருத்துவகூடமும் தப்பவில்லை…
மருத்துவரும் தப்பவில்லை, மீடியாவும் தப்பவில்லை…
பிண ஊர்வலத்தில் வெடி போட்டு மனித வேட்டையாடுகிறான்…
தலை தெறித்து தாய் இறக்கிறாள்…
குடல் வெந்து குழந்தை இறக்கிறான்…
இத்தனைக்குப்பிறகும் அசாத்திய உறக்கத்தில் அரபுலகம்…
வாய்மூடி மவ்னிக்கும் முஸ்லீம் தேசம்…
எங்கே அல் கர்ளாவி…? எங்கே ஆல ஷெய்கு…?
எங்கே தன்தாவி…? எங்கே அல் கர்ணி…?
எங்கே அரபுலக உலமாக்கள்…?
எங்கே உங்கள் கர்ஜனை…
ஒ…. அரபுலகமே….!
யூதனை எதிர்த்து அறப்போர் அறிவிக்க இன்னும் எத்தனை உயிர் எதிர்பார்க்கிறாய்…!
இன்னுமா நீ சூழ்நிலை கைதி…
எதற்காக நீ அமைதிக்கிறாய்…
உனக்கென்ன நிர்பந்தம்…
உன் தொப்புள்கொடி உறவையே…
உன் இனத்தவரையே…
உன் மொழி உச்சரிப்பவரையே…
உன் பக்கத்து முஸ்லீமையே காக்க யோசிக்கும் நீ…
நாளை… உன் தூரத்து முஸ்லீம்
இந்தியாவில் எரிக்கப்பட்டாலோ…
இலங்கையில் கொல்லப்பட்டாலோ…
பர்மாவில் புதைக்கப்பட்டாலோ…
நீ காக்க முற்படுவாய் என்பது எப்படி நிச்சயம்…?
ஒ…. அரபுலகமே…!
ஏன் இந்த மவ்னம்… எப்படி இந்த மவ்னம்…?
நீ அவனை எதிர்த்தால் உன் நாட்டில் அவன் பாய்வான் என்ற அச்சமா…
உன் மக்கள் மாய்வர் என்ற கலக்கமா…
உன் மக்கள்தான் உனக்கு உயிர் என்றால்
அம்மக்கள் தாங்கியிருப்பது உயிரில்லையா…
உனக்கு ஷஹீதின் அருமை குத்பா பயானில்தான்…
அங்கு நொடிதோறும் ஷஹீத்கள் பறவைகளாகின்றன…
“நீ எதற்காக கொல்லப்பட்டாய்…?”
என்று நாளை மறுமையில்
குழந்தையை எழுப்பி இறைவன் வினவும் போது
அக்குழந்தையின் கை நமை நோக்கி சுட்டுமே
என்ற அச்ச உணர்வு கூட உனக்கு இல்லையா…
அன்று…
ஃபைசல் இருந்தார் பலமாக கேட்டார்…
சதாம் இருந்தார் தட்டிகேட்டார்…
முர்சி இருந்தார் முட்டி கேட்டார்…
இன்று முஸ்லீம் உம்மாவை காக்க ஒருவனும் இல்லையே…
யாஅல்லாஹ் உன்னைத்தவிர…!

 

arabimuhammadshuaib@yahoo.com

 

News

Read Previous

ஃப்ரைட் ரைஸ்

Read Next

முதுகுளத்தூரில் பாலஸ்தீன மக்களுக்காக சிறப்பு துஆ

Leave a Reply

Your email address will not be published.