அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்றவர் கைது
முதுகுளத்தூர் அருகே பேரையூரில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை பேரையூர் போலீஸார் கைது செய்தனர்.
முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் கள்ளிக்குளம் விலக்கு சாலையில் பேரையூரைச் சேர்ந்த முனியாண்டி அனுமதியில்லாமல் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் பேரையூர் போலீஸார் அந்தப் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு மது விற்பனை செய்த முனியாண்டியிடம் இருந்த 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக எஸ்.ஐ. அருள்பிரகாசம் வழக்குப் பதிவு செய்து முனியாண்டியை கைது செய்தார்.