உடல் பெரிது உள்ளமும் பெரிது உயிர் சிறிது.. (கவிதை) வித்யாசாகர்!

Vinkmag ad

முகப்பூச்சு தடவு
வாசனைதிரவியம் வாரியிடு
வண்ண வண்ண ஆடைகள் நெய்துடுத்து
வரும் காலன் வராதவரை எப்படிவேண்டுமோ ஆடு;

பொய்சொல்
பொறாமை கொள்
புகழுக்கு அலைந்து எல்லாம் செய்
உடம்பென்னும் கோவில் அசுத்தமாக ஆடு;

புகையிலை உண்
புட்டியில் வாழ்
போதையில் புத்தியை அறு
பாதைகாட்டும் உடம்பு பழுதாகும்வரை ஆடு;

பெண்ணிற்கு ஏங்கு
பாரபட்சம் பார்
ஏற்றத் தாழ்வில் எள்ளி நகை
உடம்பின் ரசாத்தால் மனதை நஞ்சாக்கு;

அரசியல் ஆதாயம் செய்
அடுத்தவர் சொத்திற்கு ஆசைப்படு
விட்டது கிடைக்காவிட்டால் ஒரு கண்ணை எடு
ஆண்டோர் நற்போக்கை மாற்றி அமை
உடம்பை உடம்பிற்கு எதிரியாக்கு;

இடையே ஒரு சின்ன காய்ச்சல் வரும்
தலைவலிக்க உலகம் மறக்கும்
வயிறுவலி வாழ்க்கையைக் கொல்லும்
கைகால் கொஞ்சம் உடைந்தாலும் காண்பதெல்லாம்
முடமாய்த் தெரியும்-

கட்டை சாய்ந்தால் அத்தனையும் சாயும்
உடம்பென்னும் கோயில் உள்ளவரைதான் எல்லாம்
உயிர் போவதெனில் சட்டென விட்டுப் போகும்
உடல் தேவையெனில் உயிரையும் பிடித்துநிறுத்தும்

உடலைக் காத்து கொள்; உயிர் வேண்டுமெனில்!!
—————————————————————————
வித்யாசாகர்

News

Read Previous

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு

Read Next

அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்றவர் கைது

Leave a Reply

Your email address will not be published.