தேர்தலை முன்னிட்டு மூன்று நாள்களுக்கு கூடுதல் பறக்கும் படை ஆய்வு
முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய பகுதிகளில் மூன்று நாள்களுக்கு கூடுதல் பறக்கும் படை பிரிவு அதிகாரிகளை நியமித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமாரின் உத்தரவின் பேரில் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய பகுதியில் உள்ள 35 மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் வரை வாகனங்களை சோதனையிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக முதுகுளத்தூர் வட்டாட்சியர் ஆர்.ரவீந்திரநாதன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு பணம் கொடுப்பது சம்மந்தமாகவும், வாகனங்களை சோதனையிடுவதற்கும், அரசு அனுமதியின்றி பிரசாரம் செய்யும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், அரசு அனுமதியின்றி கட்சிக்கொடிகள் கட்டிவரும் வாகனங்களின் மீது வழக்குப் பதிவு செய்யவும், மண்டல அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். 35 மண்டல அலுவலர்களுக்கும் தனி வாகன வசதிகள் மூன்று நாள்களுக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ளது.