சரவண பொய்கை ஊரணியில் மழைநீர் தேக்கம்
சரவண பொய்கை ஊரணியில் கழிவுநீர் தேங்குவது தடுக்கப்பட்டு, மழைநீர் சேகரிக்கபட்டு வருகிறது.
முதுகுளத்தூரிலுள்ள 92 தெருக்கள், பஜாரிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சரவண பொய்கை ஊரணியில் விடப்பட்டது. இறைச்சி கழிவும் இதில் கொட்டப்பட்டது. துர்நாற்றம் ஊரையே நாறடித்தது.
இதை தொடர்ந்து சரவண பொய்கை ஊரணியை, நபார்டு திட்டத்தில் 85 லட்ச ரூபாய் மதிப்பில், சீரமைக்கும் பணி நடந்தது. இதனால் ஊரணிக்குள் கழிவுநீர், இறைச்சி கழிவுகள் தேங்குவது தடுக்கபட்டுள்ளது.
தற்போது ஊரணி கரையை சுற்றி வேலி, “பேவர் பிளாக்’ கற்களால் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேக்கமாக மாறியுள்ளது.
மேலும், நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் வசதியாக இருப்பது, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
One Comment
Great news.