டிசம்பர் 20, துபாயில் முதுவை சங்கமம் 2013
துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வருடந்தோறும் நடத்தப்பட்டு வரும் அமீரக வாழ் முதுவை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ‘முதுவை சங்கமம்’ எனும் பெயரில் நடைபெற்றுவருகிறது.
முதுவை சங்கமம் 2013 எனும் சிறப்பு நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முஷ்ரிஃப் பூங்காவில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சிங்கப்பூர் ஃபரிஹுல்லா, சென்னை கிளை ஜமாஅத் எஸ். ஜாஹிர் ஹுசைன், மதுரை கிளை ஜமாஅத் ஜாஹிர் ஹுசைன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்வில் அமீரகமெங்கும் வாழ்ந்து வரும் முதுவை மக்கள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு :
ஹெச் இப்னு சிக்கந்தர் : 050 69 44 128
ஹபிப் திவான் : 050 464 39 77
Tags: துபாய் முதுவை சங்கமம்
One Comment
துபாயில் ஐ. மு .முஸ்லிம் ஜமாத் சார்பில் முதுவை சங்கமம் நிகழ்வில் விருந்தினராக சென்னை கிளை ஜமாஅத் ஜனாப் ஜாஹீர் ஹுசைன் கலந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சி .அவர் சென்னையில் முதுகுளத்தூர் வியாபாரிகள் நல அறக்கட்டளை என்ற அமைப் பில் செயலாளராக உள்ளார் அவரை நம் வளர்சிக்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டுமாய் கேட்டுகொள்கிறேன்