List/Grid

Monthly Archives: January 2009

முஸல்லாவே !

முஸல்லாவே !

முஸல்லாவே ! முழுமனதாய் நானுன்னை மோகிக்கிறேன். யார் சொன்னது நீ வெறும் தொழுகை விரிப்பென்று? நீ சுவனத்திற்கு சுருக்குவழி காட்டும் ரத்தினக் கம்பளம் ! நன்மாராயம் ஈட்டித்தரும் அட்சயப் பாத்திரம் ! உன்னை விரிக்கையில் சொர்க்கத்தின் தூரம் சுருங்கி விடுகிறது !… Read more »

வாங்காதீர் வரதட்சணை!

வாங்காதீர் வரதட்சணை!

கொடுப்பது குற்றம்-இதைவிட வாங்குவது மாபெரும் குற்றம் இதுவே இந்தியாவின் சட்டம்-ஆனால் கொடுக்காதோர் கொடுமைக்கு ஆளாகிறார்கள் கொடுப்போர் விரும்பிக் கொடுப்தில்லை மன வேதனையோடுக் கொடுக்கிறார்கள் இதையறிந்தும் வாங்கி மகிழ்கிறார்கள் ஆண்களில் சில அறிவீனர்கள்! ஆத்திரமடையாதீர் தோழர்களே! அறிவுப்பூர்வாமாக ஆராய்ந்து பாருங்கள் ஆணுக்கு பெருமை… Read more »

இனிவரும் நாள்கள்

இனிவரும் நாள்கள்

கனவொன்று காணுகிறேன் கவிதைக் காக.. ….கண்களுக்கு வாய்த்திடுமா காட்சி யாக! இனவாதம் மதவாதம் இறந்து போக ….இதயத்து குணத்தினையே யாரும் நோக்க.. பணத்தாலும் பலத்தாலும் பேசும் போக்கை ….பேருண்மை ஒளிவீசி பொசுக்கித் தீய்க்க.. நனவாகும் நாளெண்ணி பாடி விட்டேன் ….நலமாக இனிவரட்டும்… Read more »

மறதி

மறதி

நினைத்து நினைத்து நிம்மதி இழக்கவைக்கும் நினைவுகள்… மறதி இல்லையெனில் மனிதனிடம் வாழ்க்கையில்லை மறப்பதால் மனம் மலர்கிறது வாழ்வு சுவைக்கிறது… கொட்டிய வார்த்தைகளும் கொடுத்த பொருள்களும் அவ்வபோது மறந்துவிடுவதினால் ஊறுக்கு ஓரு மயானம் இல்லையெனில் உலகமே மயானம்… நிகழ்வை மறந்துப்போனவர்களை அதை நினைவுப்படுத்தி… Read more »

அல்லாஹ்வுக்கு ஓர் அஞ்சல்- அடியானின் கெஞ்சல்

அல்லாஹ்வுக்கு ஓர் அஞ்சல்- அடியானின் கெஞ்சல்

ஆலயத்தைக் காப்பாற்ற ஆனைப் படைமீது கற்களை வீசிட அபாபீல் பறவைகளை அனுப்பி வைத்த அல்லாஹ்வே..! பாலஸ்தீனத்தின் பாலகர்களும் அக்ஸா ஆலயத்தைக் காப்பாற்ற தானே இனவெறியன் இஸ்ரேலர் மீது மன உறுதியுடன் கற்களை வீசியும்; பன்னெடுங்காலமாய் பாதுகாப்பு போரில் தன்னுயிர்,உறவு,உடைமைகள் இழ்ந்துவிட்டனரே………..! இன்னும்… Read more »

திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ர‌ம‌லான் வ‌ருகிற‌து ! ந‌ல‌ம‌ள்ளி வ‌ருகிற‌து ! க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக் கைகோர்த்து வ‌ருகிறது ! ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மான‌ம் செய்ய திருநோன்பு வ‌ருகிறது அருளாளன் அல்லாஹ்வின் அன்பள்ளி வ‌ருகிறது ! திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிறது !… Read more »

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து

சோற்றிலே நாம் கை வைத்திட- சேற்றிலே கால் வைத்து; ஏற்றமுடன் ஏர் பிடித்து; ஆற்றலுடன் தான் உழைத்திடும் போற்றுதலுக்குரிய உழவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க இல்லத்தில் செல்வம் பொங்க இனிவரும் காலமெல்லாம் இனிய கரும்பாய் வாழ்வில் சுவை தங்க சக்கரைப் பொங்கலாய்… Read more »

உண்மையின் உளறல்

உண்மையின் உளறல்

என்னோடு படித்தவள் எனதருமை தோழிகூட ஆண்டிரண்டு செல்லவில்லை மீண்டும் சந்தித்தேன் மீளொனாத் துயரத்தில் ….. அவள் அழகு முகம் மலரவில்லை அவள் அன்பு மனம் குளிரவில்லை அவளில் மங்கலமும் பொங்கவில்லை அவள் மங்கையெனும் நிலையிலில்லை ஈரேழு மாதங்களாம் அவளுக்கு மணமாகி மணவாளனுக்கு… Read more »

என் செய்வேன்?

என் செய்வேன்?

விலங்கினங்களை சிறைபிடித்து – அதை வேலிகளால் அடைத்து – நாலாபுறமும் வெஞ்சினம் கொண்ட கொல்லிகளால் வாட்டிவதைத்திடின் அவை என்செய்யும் காளை கரவை மாடுகளை எல்லாம் கயிறுகளால் கட்டி வைத்து தார் குச்சிகளால் தினமும் தீண்டினால் அவை என் செய்யும் காண்பவர் வாழாவிருப்பாரோ… Read more »