வளைகுடா Subscribe to வளைகுடா
துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கம் நடத்திய சித்திரை விஜயம் நிகழ்ச்சி
துபாய் : துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் சித்திரை விஜயம் நிகழ்ச்சி மே மாதம் 17ம் தேதி வெள்ளிக்கிழமை ஜபில் ஸ்கூல் கராமாவில் வைத்துச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு உறுப்பினர்கள் பெருந்திரளாக வந்து சிறப்பித்தனர். காயத்திரி சந்திரசேகர் வந்திருந்தோரை வரவேற்க தமிழ்த்தாய்… Read more
அஜ்மானில் சிறப்பாக நடைபெற்ற FOSTA 2013!
டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) பங்கேற்பு!! எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) ஏற்பாடு செய்த FOSTA 2013 என்ற குடும்பங்களின் இனிய சங்கம நிகழ்ச்சி கடந்த மே 17வெள்ளியன்று அஜ்மானிலுள்ள இண்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூலில்சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணியளவில் மாணவ மாணவியருக்கான போட்டிகள் துவங்கின.முன்னதாக அறிவித்தபடி 1 முதல் 3ம் வகுப்பு மாணவ மாணவியருக்குPainting/Clay Modeling போட்டி நடந்தது. 4 முதல் 6ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு வினாடி வினா (Quiz)போட்டி நடைபெற்றது. 7 முதல் 9ம் வகுப்பு மாணவ மாணவியருக்குCollage போட்டி நடைபெற்றது. 10 முதல் 12ம் வகுப்பு மாணவமாணவியருக்கு பேச்சுப் போட்டி (Elocution) நடைபெற்றது. இதல்லாமல் அனைவருக்குமாக 3 நிமிட குறும்படப் போட்டியும் (3-Minute Short Film Contest) நடைபெற்றது. அனைத்துப் போட்டிகளிலும் மாணவ மாணவியர் ஆர்வமாகப் பங்குபெற்றனர். மாணவர்களுக்குள் எவ்வளவு திறமைகள் அமுங்கிக்கிடக்கின்றன என்பதை ஒவ்வொரு போட்டியின் படைப்புகளும்எடுத்தியம்பின. குறிப்பாக மாணவர்கள் படைத்த 3 நிமிட குறும்படங்களைக்கூற வேண்டும். மொத்தம் 7 படைப்புகள் போட்டியில் கலந்துகொண்டன.அத்தனையும் தரமான படைப்புகள். மாணவ மாணவியருள் எவ்வளவுபடைப்புத்திறன் ஒளிந்துள்ளது என்பதை அவை வெளிச்சம் போட்டுக்காட்டின. Painting/Clay Modeling போட்டியின் நடுவராக இருந்த சகோ. முஹம்மத்அவர்கள் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்தார். வினாடி வினாபோட்டியை கவுன்சலிங் நிபுணரும், சமூக சேவகருமான இப்றாஹீம்அவர்கள் மிக அழகாக நடத்தினார். Collage போட்டிக்கும், 3 நிமிட குறும்படப்போட்டிக்கும் மீம் மீடியா நிறுவன வடிவமைப்பு மேலாளர் ஷாஜஹான்அவர்கள் நடுவராக இருந்து சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்தார்.பேச்சுப் போட்டிக்கு ஆடிட்டர் ஹஸன் அவர்களும், பொறியாளர் தமீம்அவர்களும் நடுவராக இருந்து சிறந்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். ஜும்ஆ இடைவேளைக்குப் பிறகு அனைவருக்கும் மதிய உணவுவழங்கப்பட்டது. அதன் பின்னர் பெற்றோருக்கும், மாணவ மாணவியருக்கும்பயனுள்ள வகுப்புகள் துவங்கின. மாணவ மாணவியருக்கு A+ Vibgyor of Life (வாழ்க்கையின் வானவில்) என்றவகுப்பு நடைபெற்றது. இதனை அபுதாபி முஸஃப்பாவிலுள்ள இந்தியன்மாடல் ஸ்கூலின் துணைத் தலைமையாசிரியர் மாஸ்டர் கே.வி. அப்துர்ரஷீத் அவர்கள் அழகுற நடத்தினார். மாணவர்களின் பிரகாசமானஎதிர்காலத்திற்கு வெளிச்சம் தரக்கூடியதாக அந்த நிகழ்வு அமைந்தது. 3மணி நேரம் நடந்த இந்நிகழ்ச்சி முழுவதையும் மாணவ மாணவியர்சிறிதும் தளர்ச்சியடையாமல் மிக்க ஆர்வத்துடன் கவனித்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் பிறிதொரு அரங்கில் பெற்றோர்களுக்கு Parenting வகுப்புநடைபெற்றது. கவுன்சலிங் நிபுணரும், சமூக சேவகருமான சகோ.இப்றாஹீம் அவர்கள் இதனை நடத்தினார். குழந்தைகளைச் சிறப்பாகவளர்ப்பதற்கு நல்ல பல ஆலோசனைகளை அவர் வழங்கினார். அதன் பிறகு பிரபல… Read more
துபாயில் நடைபெற்ற அரேபியன் டிராவல் மார்க்கெட்
துபாய் : துபாயில் வருடந்தோறும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனங்கள் பங்கேற்கும் அரேபியன் டிராவல் மார்க்கெட் மே 6 முதல் 9 ஆம் தேதி வரை துபாய் சர்வதேச வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இவ்வாண்டு இந்தியா உள்ளிட்ட 87 நாடுகளைச்… Read more
ஷார்ஜாவில் நடைபெற்ற இந்திய பாரம்பர்ய நடன நிகழ்ச்சி
ஷார்ஜா : ஷார்ஜா கைராலி கலை மையத்தின் இந்திய பாரம்பர்ய நடன நிகழ்ச்சி 17.05.2013 வெள்ளிக்கிழமை மாலை ஷார்ஜா இந்திய சங்க கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஷார்ஜா கைராலி கலை மையத்தில் பயின்று வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் தங்களது நடன… Read more
துபாயில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழக வங்கி அதிகாரிகள் பங்கேற்பு
துபாய் : துபாயில் வணிக மேலாண்மை குறித்த கருத்தரங்கு 09.05.2013 வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பரோடா வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் அலுவலர்கள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் துணைப் பொது மேலாளர் எம். குணசேகரன் மற்றும் பிராந்திய மேலாளர்… Read more
ஷார்ஜாவில் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா
ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ மையத்தில் குழந்தைகளுக்கான வாசிப்புத் திருவிழா ஏப்ரல் 23 முதல் மே 4 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற துவக்க விழாவில் ஷார்ஜா ஆட்சியாளரின் அலுவலக தலைவர் ஷேக்… Read more
ஷார்ஜாவில் நடைபெற்ற நகரத்தார் சங்க கலந்துரையாடல் நிகழ்ச்சி
ஷார்ஜா : ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் 147 ஆவது கலந்துரையாடல் நிகழ்ச்சி 26.04.2013 வெள்ளிக்கிழமை காலை ஷார்ஜா நகரத்தார் பண்ணை இல்லத்தில் நடைபெற்றது. கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தலைவர் ரமேஷ் ராமநாதன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முத்துராமன் கதிரேசன் வரவேற்புரை… Read more
கரகாட்டத்துடன் களைகட்டிய துபாய் தமிழ்ச் சங்க சித்திரைத் திருவிழா
ஷார்ஜா : துபாய் தமிழ்ச் சங்க சித்திரைத் திருவிழா 26.04.2013 வெள்ளிக்கிழமை மாலை ஷார்ஜா ரயான் ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் வெகு சிறப்புற நடைபெற்றது. துவக்கமாக அமீரக தேசிய கீதம், இந்திய தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. சித்திரைத்… Read more
அபுதாபியில் சர்வதேச புத்தகக் கண்காட்சி
ஏப்ரல் 29 வரை அபுதாபியில் சர்வதேச புத்தகக் கண்காட்சி அபுதாபி : அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் 23 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சி 24.04.2013 புதன்கிழமை காலை துவக்கி வைக்கப்பட்டது. இக்கண்காட்சி அபுதாபி சுற்றுலா மற்றும் கலாச்சார… Read more
துபாயில் நடைபெற்ற துஆ மஜ்லிஸ்
துபை ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் வி.களத்தூர் மர்ஹும் ஷாகுல் ஹமீது மறைவிற்கு நடைபெற்ற துஆ மஜ்லிஸ் ! துபை : துபை ஈமான் மற்றும் அமீரக காயிதேமில்லத் பேரவையின் செயற்குழு உறுப்பினர் வி.களத்தூர் மர்ஹூம் ஷாகுல் ஹமீது அவர்களது மஃபிரத்திற்காக… Read more












